Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரஞ்சித் மீது போடப்பட்ட வழக்கினைத் திரும்பப் பெறக் கோரி நீல புலிகள் இயக்கத்தினர் தொடர் ஆர்ப்பாட்டம்

ஜுன் 13, 2019 06:20

கும்பகோணம்: இயக்குனர் ரஞ்சித் மீது போடப்பட்ட வழக்கினைத் திரும்பப் பெறக் கோரி கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் அம்பேத்கர் சிலை முன்பு நீல புலிகள் இயக்கத்தினர் தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கும்பகோணம் அருகே திருப்பனந்தாளில் கடந்த ஐந்தாம் தேதி நீல புலிகள் இயக்க நிறுவனர்  உமர் பாரூக் ன் நான்காம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் இயக்குனர் ரஞ்சித் கலந்து கொண்டு ராஜராஜ சோழன் பற்றி பேசிய  பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ராஜராஜ சோழன் பற்றி பேசியதைத் தொடர்ந்து ரஞ்சித் மீது 153 ,153 (a) ஆகிய இரு பிரிவுகளின் கீழ் திருப்பனந்தாள் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .
இயக்குனர் பா .ரஞ்சித் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப் பெறக் கோரி அம்பேத்கர் சிலை முன்பு நீல புலிகள் இயக்கத்தினர் தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது .இயக்குனர் ரஞ்சித் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும், மடத்திற்கு சொந்தமான நிலங்களை நிலம் இல்லா ஏழைக ளுக்கு பிரித்து வழங்க வேண்டும், அதுவரை தங்களது தொடர் முழக்கப் போராட்டம்  தொடரும் என்று தெரிவித்து 50க்கும் மேற்பட்ட பட்டவர்கள்  கூடியிருப்பதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. 

தலைப்புச்செய்திகள்